நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் இன்று இறுதி ஊர்வலம்!!
Sep 20, 2023, 09:26 IST

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது உடலுக்கு இன்று இறுதி ஊர்வலம் சென்று இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மீரா வழக்கம்போல் தனது அறையில் உறங்க சென்றுள்ள நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி மீராவின் அறைக்கு சென்று பார்த்த போது, மீரா ஃபேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து, வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் உதவியுடன் காரில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். இது குறித்து தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக மீரா ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இன்று மீராவின் இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை 9 மணி அளவில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. அதன் பின்னர், கீழ்ப்பாக்கத்தில் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மீரா வழக்கம்போல் தனது அறையில் உறங்க சென்றுள்ள நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி மீராவின் அறைக்கு சென்று பார்த்த போது, மீரா ஃபேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து, வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் உதவியுடன் காரில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். இது குறித்து தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக மீரா ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இன்று மீராவின் இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை 9 மணி அளவில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. அதன் பின்னர், கீழ்ப்பாக்கத்தில் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.