பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை!! உறைய வைக்கும் குளிரில் தலைநகர்!!
Jan 9, 2023, 08:53 IST

குளிர் காலத்தில் தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் அதிகப்படியான பனிமூட்டம் நிலவுவது வழக்கம். அந்த வகையில், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களை கடும் குளிர் ஆட்டிப்படைத்து வருகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக கடும் குளிரை எதிர்கொண்டு வருகிறது டெல்லி. நகரின் மையப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு 2 டிகிரிக்கு குறைவான அளவில் வெப்பநிலை பதிவானது.

அதிக பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதுவரை, 100 விமானங்கள், 43 ரயில்கள் தாமதமாக டெல்லிக்கு வந்துள்ளன. டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் குளிர் அலை மற்றும் கடுமையான பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த கடும் குளிர் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 டிகிரிக்கு குறைவான, எலும்பை உறைய வைக்கும் அளவுக்கு குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளும் விடுமுறை அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல, குளிர் அலை காரணமாக ஜார்கண்ட் மாநிலமும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக ஜார்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சில மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் இடங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதுவரை, 100 விமானங்கள், 43 ரயில்கள் தாமதமாக டெல்லிக்கு வந்துள்ளன. டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் குளிர் அலை மற்றும் கடுமையான பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த கடும் குளிர் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 டிகிரிக்கு குறைவான, எலும்பை உறைய வைக்கும் அளவுக்கு குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளும் விடுமுறை அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல, குளிர் அலை காரணமாக ஜார்கண்ட் மாநிலமும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக ஜார்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சில மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் இடங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.