இன்று விண்ணில் பாயும் சந்திரயான் 3!! அதன் சிறப்புகள்??
Updated: Jul 14, 2023, 09:13 IST

இன்று பிற்பகல் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலம், விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன.

சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ள ,நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதை தொடர்ந்து, விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்கியது. somanath byte சந்திரயான் 3 விண்கலத்தில் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் உள்ளது.
நிலவில் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதி, ரோவர் நிலவில் ஆய்வு செய்யும் கருவி, இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இருந்தும் நிலவுக்கு அனுப்பப்படும் 3- ஆவது விண்கலமான 'சந்திரயான் -3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ள ,நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதை தொடர்ந்து, விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்கியது. somanath byte சந்திரயான் 3 விண்கலத்தில் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் உள்ளது.
நிலவில் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதி, ரோவர் நிலவில் ஆய்வு செய்யும் கருவி, இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இருந்தும் நிலவுக்கு அனுப்பப்படும் 3- ஆவது விண்கலமான 'சந்திரயான் -3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.