Movie prime

அதிர்ச்சி!! நள்ளிரவில் தடம்புரண்ட விரைவு ரயிலின் 21 பெட்டிகள்!! 5 பேர் பலி!!

 
train accident
பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யாவை நோக்கி வடகிழக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. 

train

பீகாரில் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென 3 பெட்டிகள் தடம் புரண்டது. அதில் இருந்தவர்கள் பெட்டிக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டார்கள். இந்த  விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்தை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.  இதுவரை காயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகள் மூலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
train accident
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அறிந்து கொள்ள அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.