Movie prime

அதிர்ச்சியில் பொதுமக்கள்!! தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!!

 
highways
இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் ₹5 முதல் ₹65 வரை அதிகரிக்க உள்ளது. தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 25 க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் அதிகரிக்க உள்ளது.
nhai
தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளியில் விவரங்கள் கூறுகின்றன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களின் விலை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு ஏற்கனவே ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் 10% அதிகரிக்கப்பட்டுள்ளது.
tollgate
இந்நிலையில், மீண்டும் ஒரு முறை நாளை முதல் சுங்க கட்டணம் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் அதிகரிக்கப்பட்ட 29 சுங்கச்சாவடிகள் தவிர மீதி 25 சுங்கச்சாவடிகளில் ₹5 முதல் ₹65 வரை சுங்க கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு காரணமாக லாரி வாடகை உயர வாய்ப்புள்ளது. லாரி வாடகை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.