Movie prime

எச்சரிக்கை!! ஏப்ரல் 5 வரை இடியுடன் மழை!! வானிலை ஆய்வு மையம்!!

 
rain
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, புயல் சுழற்சி போன்ற காரணங்களால் அடுத்த சில நாட்களுக்கு இதமான தட்பவெப்ப சூழல் தரும் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த புயல் சுழற்சி தென்மேற்கு ராஜஸ்தான் பகுதிக்கு மேல் உள்ளது. அதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், சண்டிகர், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு போன்ற மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
rain
மேலும், மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுவை, கேரளா, மாஹே மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
rain
அடுத்த 5 நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை காரணமாக, வடக்கு, மத்திய மற்றும் தீபகற்ப மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.