மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம்!! செப்டம்பரில் தொடங்கும்!!
Aug 23, 2022, 10:09 IST

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் 93,000 மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் செப்டம்பர் மாதம் முதல் வாரம் துவக்கி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஏற்கனவே படிப்பை முடித்தவர்களும், தனியார் பள்ளியில் படித்த மாணவிகளும், முதுகலைப் பட்டப்படிப்பில் படிக்கும் மாணவிகள் என்று கிட்டத்தட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களில் தகுதியான இளநிலைப் பட்டபடிப்பினை படிக்கும் 93,000 மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் நடப்புக் கல்வி ஆண்டில் இளநிலை முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்காக புதிய பதிவுக்கான சேவை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு புதிய பதிவுக்கான https://penkalvi.tn.gov.in/ இணையதளம் விரைவில் திறக்கப்படும் என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அறிவித்தது.

உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ₹1000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கு ₹698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி படித்து முடிக்கும் வரை மாதம் ₹1,000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் போன்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி வைப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஏற்கனவே படிப்பை முடித்தவர்களும், தனியார் பள்ளியில் படித்த மாணவிகளும், முதுகலைப் பட்டப்படிப்பில் படிக்கும் மாணவிகள் என்று கிட்டத்தட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களில் தகுதியான இளநிலைப் பட்டபடிப்பினை படிக்கும் 93,000 மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் நடப்புக் கல்வி ஆண்டில் இளநிலை முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்காக புதிய பதிவுக்கான சேவை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு புதிய பதிவுக்கான https://penkalvi.tn.gov.in/ இணையதளம் விரைவில் திறக்கப்படும் என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அறிவித்தது.

உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ₹1000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கு ₹698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி படித்து முடிக்கும் வரை மாதம் ₹1,000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் போன்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி வைப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.