10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!! முடிவுகள் எப்போது வெளியாகும்??
Apr 24, 2023, 08:25 IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடைந்தன. ஏற்கனவே 12 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து, மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு தேர்வுத்துறை ஏற்கனவே தனியார் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதனால், குறிப்பிட்ட நாளில் விடைகள் திருத்தும் பணி நிறைவடையும்.

மேலும், வரும் மே 10 ஆம் தேதிக்குள் 12, 11 ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மே 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு தேர்வுத்துறை ஏற்கனவே தனியார் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதனால், குறிப்பிட்ட நாளில் விடைகள் திருத்தும் பணி நிறைவடையும்.

மேலும், வரும் மே 10 ஆம் தேதிக்குள் 12, 11 ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மே 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.