Movie prime

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்?? அமைச்சர் தகவல்!!

 
kkssr minister
இன்று பொதுப் பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெற்று வருகிறது. முன்பு நடைபெற்ற கேள்வி நேரத்தில், ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
tn l a
இதேபோல் அரசு கொறடா கோவி செழியன் டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம்  தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும் வலியுறுத்தியிருந்தார். 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்று இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.
tn
8 மாவட்டங்களை பிரிப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பான கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறினார்.