ரேஷன் பொருட்களை வாங்க கூகுள்பே, போன்பே பயன்படுத்தலாமா?? தமிழக அரசு அறிவிப்பு!!
Sep 3, 2022, 07:22 IST

ரேஷன் கடைகளில் கூகுள் பே போன்ற யுபிஐ மூலம் பணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிவித்தார்.

கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறிப்பிட்டு அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான தரச்சான்றிதழ், உணவு பொருட்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான சான்றிதழ் போன்றவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
சில தேர்ந்தெடுக்கப்படும் ரேஷன் கடைகளில் பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாவட்டந்தோறும் 10 ரேஷன் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும்.
பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நியாய விலைக் கடைகளுக்கு அருகில் காலி இடம் இருந்தால், அந்த இடங்களில் உணவுப் பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கும், நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ள மூட்டைகளை பாதுகாப்பாக இரும்பு பலகைகளின் மீது அடுக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறிப்பிட்டு அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான தரச்சான்றிதழ், உணவு பொருட்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான சான்றிதழ் போன்றவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
சில தேர்ந்தெடுக்கப்படும் ரேஷன் கடைகளில் பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாவட்டந்தோறும் 10 ரேஷன் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும்.
பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நியாய விலைக் கடைகளுக்கு அருகில் காலி இடம் இருந்தால், அந்த இடங்களில் உணவுப் பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கும், நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ள மூட்டைகளை பாதுகாப்பாக இரும்பு பலகைகளின் மீது அடுக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.