பிரபல உதவி இயக்குநர் தூக்கிட்டு தற்கொலை!! திரையுலகில் சோகம்!!
Updated: Sep 1, 2022, 16:06 IST

ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் பகுதியில், சந்திரன் (40) என்பவர் வசித்து வந்தார். இவர், சினிமாத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இது குறித்து கடந்த 23 ஆம் தேதி, இவரது மனைவி சரஸ்வதி சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் பகுதியில், தனியார் நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். இதைக்கண்ட, அப்பகுதி மக்கள் சந்திரனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்ததுடன் பொன்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரன் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன சந்திரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கடந்த 23 ஆம் தேதி, இவரது மனைவி சரஸ்வதி சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் பகுதியில், தனியார் நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். இதைக்கண்ட, அப்பகுதி மக்கள் சந்திரனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்ததுடன் பொன்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரன் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன சந்திரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.