Movie prime

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு!!

 
School leave
நாளை ஜனவரி 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்த மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.  
hethai amman
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 21 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பணி நாளாக பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
baduga
ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ஜனவரி 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். அதே சமயம், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
leave
ஜனவரி 4 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 21 ஆம் தேதி மாதத்தின் 3 ஆவது சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.