மின் இணைப்புடன் ஆதார் எண்ணை உடனடியாக இணையுங்கள்!! 2 நாள் அவகாசம்!!
Jan 29, 2023, 13:19 IST

தமிழ்நாட்டில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் மின்சார வாரியத்தின் மூலம் உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணி துவங்கப்பட்டது. 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர் ஆதார் எண் மற்றும் மின் இணைப்புகளை இணைக்க முதலில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அவகாசம் இருந்தது.
பின்னர் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ள நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜனவரி 31 ஆம் தேதி நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளது. அதனால், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் விரைந்து இணைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணி துவங்கப்பட்டது. 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர் ஆதார் எண் மற்றும் மின் இணைப்புகளை இணைக்க முதலில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அவகாசம் இருந்தது.
பின்னர் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ள நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜனவரி 31 ஆம் தேதி நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளது. அதனால், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் விரைந்து இணைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.