Movie prime

அதிர்ச்சி!! குடியுரிமையை துறந்த 1.63 லட்சம் இந்தியர்கள்!!

 
passport
கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 (1,63,370) நபர்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுள்ளனர். மக்கள் வெளிநாட்டு குடி உரிமையை பெற்றபின் இந்தியா குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்.

ஏனெனில், இந்திய அரசியலமைப்பின் படி ஒருவர் தாமாக முன்வந்து வேறு நாட்டு குடியுரிமையை பெற்றால் அவர்களது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படும். அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 (1,63,370) நபர்களின் இந்திய குடியுரிமை ரத்தாகி உள்ளது.
central minister nithyanatha rai
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 44 ஆயிரம் நபர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு 85 ஆயிரத்து 256 நபர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் அறிவித்தார்.