அதிர்ச்சி!! பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பலி!!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாப பலி. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குதிரைக்கல்மேடு சேர்ந்தவர், மாதையன் - தங்கமணி என்ற தம்பதி. இந்த தம்பதிக்கு திவாகர் என்ற ஒரு மகன் உள்ளார்.
திவாகர் அம்மாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். இவர் தினமும் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இன்றைய தினம் பள்ளி பேருந்தில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளார்.
பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததில் நிலைதடுமாறி அந்த மாணவன் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த மாணவன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி உள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவன் தலை நசுங்கி பலியாகி உள்ளான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.