Movie prime

அதிர்ச்சி!! கல்லூரி மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை!!

 
murder
புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள ஒரு கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வரும் மாணவி கீர்த்தனா. இவரை, முகேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கல்லூரிக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிய மாணவி கீர்த்தனாவை, பேருந்து நிறுத்தத்தில் வைத்து, சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினார் முகேஷ்.
pudhucherry
தற்போது, காவல் துறையினர் முகேஷைத் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி அருகே உள்ள சன்னியாசிக் குப்பம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த நாகராஜ், என்பவரின் மகள் கீர்த்தனா (17). கீர்த்தனா, கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

நாகராஜின் முதல் மனைவியின் தம்பி மகன் முகேஷ் (22), கீர்த்தனாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்து, தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவி கீர்த்தனா, சன்னியாசி குப்பம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.
blood
கீர்த்தனாவிடம் முகேஷ் பேச முயன்றுள்ளார், கீர்த்தனா பேச மறுக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை கொலை செய்து விட்டு முகேஷ் தப்பியோடி உள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவி ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக இது குறித்து திருபுவனை காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய முகேஷைத் தேடி வருகின்றனர். இந்த முகேஷின் மீது தனியார் மதுக்கடையில் வெடிகுண்டு வீசியது, அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் காவல் துறையில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.