Movie prime

அதிர்ச்சி!! தமிழகத்தை மிரட்டும் கொரோனா!! ஊரடங்கு வர வாய்ப்புள்ளதா??

 
corona test
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரை கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வந்தது. அதன் பிறகு மீண்டும் அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கை பின் மீண்டும் குறைந்தது. இவ்வாறு கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மாறி மாறி அதிகரிப்பதும் பின் குறைவதுமாக இருந்து வந்தது.
corona new
தற்போது மீண்டும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர், இந்தியாவில் 40 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்றும், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 195 என பதிவாகி உள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. ஆனால் பிஏ 4, பிஏ 5 வகை உருமாறிய கொரோனா தொற்று புதிதாக பதிவாகி வருவது, 5ஆவது அலை தொடங்கியது என்பதை காட்டுகிறது.
vaccination
தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அனைவரும் பரிசோதனை செய்து வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மக்கள் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.