தமிழக அரசு அறிவிப்பு!! அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் விவரம்!!
Dec 27, 2022, 06:59 IST

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்க சி மற்றும் டி பிரிவை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ₹3000 என்ற உச்ச வரம்பிற்குட்பட்ட மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லறை செலவினங்கள் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ₹1000 மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், மற்றும் முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ₹500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லறை செலவினங்கள் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ₹1000 மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், மற்றும் முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ₹500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.