Movie prime

தமிழக அரசு அதிரடி!! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் சிறப்பான பரிசு!!

 
girls

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அண்ணா பிறந்த நாளில் தமிழகத்தில் காலை  உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளை முன்னிட்டு பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
tn l a

அதன்படி, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அனைத்து மாணவர்களுக்கு பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு - 1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்களுக்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உயரும்!, 5. அண்ணாவின் வாழ்விலே என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு - 1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. அண்ணாவின் மனிதநேயம், 3. அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணாவும் தமிழ் சமுதாயமும், 5. அண்ணாவின் அடிச்சுவட்டில் தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 
students

மேலும், இதை தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி அனுசரிக்க பட உள்ள பெரியார் பிறந்தநாளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

1. பெண்ணடிமை தீருமட்டும், 2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே, 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. பெண் ஏன் அடிமையானாள்?, 2. இனிவரும் உலகம், 3. சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் என்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Money

இந்த போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ₹5000,  2 ஆம் பரிசாக  ₹3000, 3 ஆம் பரிசாக ₹2000 வழங்கப்படும். மேலும், சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ₹2000  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.