Movie prime

சோகம்!! வாய்க்காலில் தவறி விழுந்த 5 வயது சிறுமி பரிதாப பலி!!

 
seerkali sirumi
சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தில் வாய்க்காலில் தவறி விழுந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த எருக்கூர் என்ற கிராமத்தில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர், ராமன். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஹர்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.
seerkali sirumi
ஹர்ஷிதா, அங்குள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டுக்கு அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷிதா, வீட்டின் பின்புறம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார்.

வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் நீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் பெற்றோர்கள் மகளை காணவில்லை என்று தேடியபோது, வாய்க்காலின் ஓரத்தில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
suicide
தகவல் அறிந்த வந்த கொள்ளிடம் காவல்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.