Movie prime

அதிரடி!! ரேஷன் கடைகளில் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் உணவு தானியங்கள்!!

 
ration atm
ரேஷன் கடைகளில் எளிய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்குவது வழக்கம். இந்த ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பணிக்கு வந்த பொருள்கள் விநியோகம் செய்யும் நேரம் எப்போது, என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை பார்த்து மக்கள் வாங்குவது மக்கள் நேரத்தையும் அதிகம் விரயமாக்குகின்றது. ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஒருவர் எந்த மாநிலத்திலும் ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதனிடையே, ரேசன் பொருட்களை வாங்க ரேசன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.
ration_shop
இந்த நிலையில் ரேசன் பொருட்கள் வாங்குவதே மக்களுக்கு எளிதாக்கும் வகையில், சில மாநிலங்களில் 'ரேஷன் ஏடிஎம்கள்' தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. பணம் எடுக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களை போலவே, ரேஷன் பொருட்களை இந்த இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இது போன்ற 3 ரேஷன் தானிய ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த மார்ச் 15ம் தேதி திறக்கப்பட்டுள்ளன. அம்மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் திறக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் சுமார் 150 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் கை விரல் ரேகை அடையாளம் மூலம் சரிபார்ப்பு செய்த பின்னர், இந்த இயந்திரங்கள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
ration shop
லக்னோ மட்டுமல்லாது, வாரணாசி மற்றும் கோரக்பூர் பகுதிகளிலும் இந்த ரேஷன் ஏடிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 3 இயந்திரங்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுபோன்ற 7 உணவு தானிய ஏடிஎம்கள் செயல்படுகின்றன. 30 நொடிகளிலேயே தங்களின் பொருட்களை பெறுவதால் நேரம் வெகுவாக மிச்சமடைகிறது எனக் கூறும் மக்கள், இயந்திரங்கள் விநியோகம் செய்வதால் பொருட்களை குறைத்து போட்டு மோசடி செய்ய முடியாது, என கூறுகின்றனர்.