அட்சய திருதியை வரும் நிலையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது!!

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி அட்சய திருதியை திருநாள் வர உள்ளது. அட்சய திருதியை அன்று அனைவரும் நகை வாங்கும் வழக்கம் நம் நாட்டில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இன்று கிராமுக்கு ₹70 குறைந்துள்ளது. அதனால், நேற்று ₹5,730 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ₹5,660 க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையும் ₹560 குறைந்துள்ளது. இதனால், நேற்று ₹45,760 க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹45,200 க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ₹1.50 குறைந்துள்ளது. இதனால், நேற்று ₹83 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ₹81.50 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹81,500 ஆக உள்ளது.