Movie prime

அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
rain
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
rain
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 40 பேர் கொண்ட இரண்டு குழுவினர், அதிநவீன உபகரணங்களுடன் கனமழை காரணமாக சென்றுள்ளனர். சென்னையிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.