Movie prime

அடுத்த 2 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
rain
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூலை 7 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
rain
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, தஞ்சை ஆகிய 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
rain
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அம்மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.