Movie prime

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!!

 
rain
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூலை 12 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
rain
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, கோவை, நீலகிரி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
rain
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களை பொறுத்தவரை மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வேண்டும் கூறப்பட்டுள்ளது.