Movie prime

அரபிக்கடலில் உருவான 'தேஜ்' புயல்!! மேலும் தீவிரமடைய வாய்ப்பு!!

 
cyclone
தமிழகத்தில் வரும் 22 முதல் 25 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
rain
இந்நிலையில், அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டது. அதை தொடர்ந்து, நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் வலுப்பெற்று புயலாக உருமாறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
cyclone
மேலும், அரபிக் கடலில் உருவாகி உள்ள புயலுக்கு 'தேஜ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த தேஜ் புயல் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி ஓமன் அருகே கரையை கிடைக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.