முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!! 15,75,900 மாணவர்கள் பயனடைவர்!!
Jul 4, 2023, 09:10 IST

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிராந்தி வழங்கப்பட்டது.

தற்போது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு ₹404 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்தால், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் 31,008 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு ₹404 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்தால், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் 31,008 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.