தேர்வர்களுக்கு நற்செய்தி!! குரூப் 4 காலிப்பணியிடங்கள் 10,117ஆக அதிகரிப்பு!!
Mar 23, 2023, 11:47 IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்தன. இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117 ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது உள்ள அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற பல துறைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் குறையும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருந்தபோதும், கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்தன. இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117 ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது உள்ள அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற பல துறைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் குறையும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.