தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
Sep 5, 2023, 09:31 IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

அதன் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான தென் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான தென் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.