Movie prime

அரசு பள்ளிகளில் புதிய முயற்சி!! பள்ளிக்கல்வித்துறை அறிக்கை!!

 
leave
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது வழக்கம். தற்போது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது.
palikalvithurai
அதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்' நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
students
அதன்படி, நாளை ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாளான ஏப்ரல் 28 ஆம் தேதி வரை இந்த 'மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்' நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.