அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் மழை!!
May 3, 2023, 09:23 IST

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும், அதை தொடர்ந்து மே 7 அல்லது 8 ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும், அதை தொடர்ந்து மே 7 அல்லது 8 ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.