Movie prime

பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பு!!

 
palikalvithurai
தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை பொது தேர்வு விடை தாள் திருத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு உள்ளே வந்து பணி முடியும் வரை ஆசிரியர் வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
teachers
மேலும், மாணவர்களின் மதிப்பெண்களை அதிகமாகவோ அல்லது குறைத்தோ வழங்கக்கூடாது. மாணவர்களின் விடைத்தாளை முறையாக மதிப்பீடு செய்து சரியான மதிப்பெண்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீடுகளில் ஏதேனும் தவறு நேர்ந்தால் விடைத்தாள் திருத்தப்பணி மையத்திற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
teachers
மேலும், ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் 79 மையங்களில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.