Movie prime

அதிர்ச்சி!! 50,674 பேர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை!!

 
students

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, முதல் தேர்வான தமிழ் மொழித் தேர்வை  50,674 மாணவர்கள் எழுதவில்லை. நேற்றைய தேர்வில் கலந்து கொள்ளாத நிலையில், இந்த வருடம் இந்த மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாது.
exam webp
இன்றைய இளைய தலைமுறையினர் அதிக அளவில் மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். இது குறித்து அரசோ.. .பள்ளி ஆசிரியர்களோ, பெற்றோர்களோ பெரிய அளவில் அக்கறை கொள்வதில்லை. மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கடமையில் இருந்து தவறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8,51,303 பள்ளி மாணவ - மாணவிகளும், தனித்தேர்வர்கள் 23,747 பேரும் என்று மொத்தம் 8,75,50 பேர் எழுத இருக்கின்றனர்.
palikalvithurai
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை என்று  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ, மாணவிகளில் 49,559 பேர் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. மேலும், 12 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை 1,115 தனித்தேர்வர்கள் எழுத வரவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.