Movie prime

அதிர்ச்சி!! சென்னையில் திடீர் நில அதிர்வு!! பீதியில் மக்கள்!!

 
earthquake
சென்னை கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது. திடீரென வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு தங்களது வீட்டை விட்டு வெளியேறி அவசர அவசரமாக குடும்பத்தினருடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
apartment
சென்னை கொரட்டூர் காவல் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த குடியிருப்புகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வினால், ஒரே நேரத்தில் பலரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
earthquake
நில அதிர்வுக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை. அடுக்குமாடி கட்டிடத்தில் ஏதாவது விரிசல் ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.