Movie prime

தமிழக அரசு அதிரடி!! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ₹10,000 வழங்கப்படும்!!

 
accident
சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு மத்திய அரசு ₹5,000 வெகுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில், இவ்வாறு உதவும் நற்கருணை வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ₹5,000  வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது விபத்து ஏற்பட்டவர்களை காப்பாற்றினால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வெகு,அத்தியா சேர்த்து ₹10,000 வழங்கப்படும்.
bike accident
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில், விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்கப்படுத்தி பாராட்டும் வகையில் அவர்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும் என்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவோருக்கு மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் ₹5,000 சேர்த்து மாநில அரசு சார்பில் ₹5,000 வழங்கப்படும்.
Money
அந்த வகையில், விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அரசு சார்பில் மொத்தம் ₹10,000 வழங்கப்படும். இந்த சன்மானத்தை பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தகுதியான நபர்கள் குறித்த விபரங்களை போக்குவரத்து ஆணையரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.