மகளிர் உரிமை தொகை திட்டம்!! விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!!
Aug 10, 2023, 09:43 IST

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் அதன் பின்னர், 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் அதன் பின்னர், 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.